நாட்டுப் பண் பாடும் முன்பே ஆளுநர் எழுந்து செல்லலாமா? பேரவைத் தலைவர் மு.அப்பாவு கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

நாட்டுப் பண் பாடும் முன்பே ஆளுநர் எழுந்து செல்லலாமா? பேரவைத் தலைவர் மு.அப்பாவு கேள்வி

சென்னை, ஜன.10 சட்டப்பேரவையில் நாட்டுப் பண் பாடும் வரை இருக்காமல், ஆளுநர் ஆர்.என்.ரவி முன்கூட்டியே எழுந்துசென்று நாட்டை அவமானப் படுத்தியது மாபெரும் குற்றம் என்று  தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக் கான முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (9.1.2023) உரை யாற்றினார். பின்னர், பேரவைத் தலை வர் மு.அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக் குழு ஆலோசனை நடத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அப்பாவு கூறியதாவது:

உரை தயாரிக்கப்பட்டு, ஆளுநருக்கு கடந்த 5-ஆம் தேதி அனுப்பப்பட்டது. அது ஏற்கப்பட்டு 7-ஆம் தேதி அனுப்பினார். அப்போது மாற்றுக் கருத்து எதையும் கூறாமல், 9ஆ-ம் தேதி அதை வாசிப்பதில் பல பகுதிகளை தவிர்த்து, சில பகுதிகளை சேர்த்து பொது மேடைபோல பேசுவது நாக ரிகம் அல்ல.அது தவறு. பிரதமர் மோடியின்அரசால் எழுதித் தரப்படும் உரையைத்தான் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஒரு வார்த்தை மாறாமல் வாசிப்பார்.

அம்பேத்கர் பெயரையே....

ஆளுநர் உரை எழுதி ஒப்புதல் பெற்றதை தவிர வேறு எதையும் பிரசுரிக்க கூடாது என்பதால், ஒப்புதல் பெறப்பட்ட முழுமையான உரை அவைக்குறிப்பில் இடம்பெறும் என முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்து, ஒருமனதாக ஏற்கப்பட்டது.அவைக்கு ஆளுநர் உரையாற்ற வந்தால், முடியும் வரை இருந்து நாட்டுப் பண் பாடப்படும்போது, மரியாதை செலுத் திய பிறகு புறப்படுவதுதான் மரபு. அவ்வாறு செய்யாமல், முன்கூட்டியே எழுந்துசென்று நாட்டையே அவ மானப்படுத்தியது மிகப் பெரிய குற்றம். சட்டப் பேரவைகளில் ஆளுநர் உரையாற்ற அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 175, 176-இன்படிதான் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அர சமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே அவர் உச்சரிக்காதது வேதனை.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இடையூறு செய்து வந்த ஆளுநர் தன்கர், தற்போது குடியரசுத் துணைத் தலைவர் ஆகியுள்ளார். அதுபோல, தமிழ்நாடு ஆளுநருக்கும் நோக்கம் இருக்கிறதா என தெரியவில்லை. ஆளு நரை திரும்பப் பெறுமாறு தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று கேட் கிறீர்கள். பெரும்பான்மை உறுப்பினர் களின் விருப்பம் குறித்து அவை முடி வெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment