சென்னை, ஜன.9 சென்னையில் உள்ள தாம்பரம், கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சபரி மலைக்கு சென்று வர முடிவெடுத்து, 7.1.2023 அன்று நள்ளிரவு நேரத்தில் 22 பேர் வேனில் புறப்பட்டு பயணம் செய்து கொண்டு இருந்தனர்.
வேனை ஓட்டுநர் சந்திரசேகர் இயக்கியுள்ளார். இவர்களின் வாகனம் 8.1.2023 அதிகாலை 05:15 மணியளவில் திண்டிவனம் அருகே சென்றுகொண்டு இருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறி கெட்டு இயங்கி சாலையோர பள்ளத் தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானத இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 8 வயது சிறுமி உட்பட 18 பேர் காயமடைந்தனர்.
விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வு இடத் திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்தோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment