கால்பந்து வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

கால்பந்து வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு

சென்னை,டிச.14- கால்பந்து வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டுள் ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

அறிவிப்பு வருமாறு, சென்னையில், தொடர்ந்து பெய்துவரும் கன மழையின் காரணமாக மாநில அளவிலான கால்பந்து வீரர் - வீராங்கனைகள்  தேர்வு (State Level  Selection Trials for Football- Boys & Girls)   இடம் மற்றும் நாள் மாற்றப்பட்டுள்ளது.

திருச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில்  15.12.2022  அன்று  மாணவியருக்கான தேர்வு மற்றும் 16.12.2022  அன்று மாணவர்களுக்கான தேர்வு நடைபெற வுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment