ஏழுமலையான் கோயிலில் தெற்கு வாசல் தரிசனம் - பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயமாம் - அந்தோ பரிதாபம் ஏழுமலையான் சக்தி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

ஏழுமலையான் கோயிலில் தெற்கு வாசல் தரிசனம் - பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயமாம் - அந்தோ பரிதாபம் ஏழுமலையான் சக்தி!

திருமலை,டிச.28,- திருப்பதி திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் திருப்பதி தேவஸ் தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால், திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கட ரமணா ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், இணை நிர்வாக அதிகாரி சதா பார்கவி, திருப்பதி காவல்துறை கண்காணிப் பாளர் பரமேஸ்வர் ரெட்டி உட்பட  பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று (27.12.2022) நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சுப்பா ரெட்டி செய்தியாளர் களி டம் கூறியதாவது: 

ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஓர் இடத்திலும் சர்வ தரிசன நுழைவு அட்டைகள் வழங்கப்படும். திருப் பதியில் மட்டும் 8 இடங்களில் 92 விநியோக கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் 1ஆம் தேதி மதியம் 2 மணியில் இருந்து சர்வ தரிசன நுழைவு அட்டைகள் விநியோகம் செய்யப்படும். தொடர்ந்து 4.50 லட்சம் நுழைவு அட்டைகள் பக்தர்களுக்கு ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும். திருமலையில் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

இலவச நுழைவு அட்டைகள் பெற்றுக்கொண்ட பக்தர்கள், அதில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் ஒரு மணி நேரத்துக்கு முன்பு திரும லைக்கு வந்தால் போதுமானது. நுழைவு அட்டை பெற்றவர்கள், திருமலையில் உள்ள கிருஷ்ணா தங்கும் விடுதி அருகே ஆஜராக வேண்டும். பக்தர்களின் கூட்டத் தால் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 3ஆம் தேதி வரை திருமலையில் அறைகள் முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.

ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நேரில்வரும் அரசியல் பிரதிநிதிகளுக்கு மட்டுமே தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் 3.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. 

ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் 2 மலைப்பாதைகளும் திறந்தே இருக்கும். கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டியது கட்டாயம். 

-இவ்வாறு சுப்பாரெட்டி கூறினார்.

No comments:

Post a Comment