ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்கக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்கக் கூட்டம்

சேலம் அம்மாபேட்டை சாலையில் அபி மகாலில் 27.11.2022  அன்று நடைபெற்ற ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டத்தில் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி உரையாற்றினார்.

செய்யாறு

29.11.2022 அன்று செய்யாறு நகரில் திராவிடர் கழகத்தின் சார்பாக ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் தலைமையேற்க நகர தலைவர் தி.காமராசன் முன்னிலையில் நடைபெற்றது. கழக சொற்பொழிவாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன் தொடக்க உரையையும், கழக மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி எழுச்சி உரையையும் ஆற்றினார்.

இந்நிகழ்வில் க.வெங்கடேசன், என்.வி.கோவிந்தன், கஜபதி, சீனுவாசன், பரந்தாமன், பொன்சுந்தர், மு.வெங்கடேசன், திராவிட மாணவர் கழக தோழர்கள் சிவகுமார், ஆகாஷ், சிலம்பரசன், நவீன், பிரவீன், விஜய், மணிகண்டன், நரேஷ், மகளிர் தோழியர் மு.பூர்ணிமா, டி.சசிதரன், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் தங்கம் பெருமாள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment