நாகர்கோவில், டிச.15- ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் தந்தை பெரியார் சிலை முன்பாக, மாவட்ட தலைவர்
மா.மு. சுப்பிரமணியம், தலைமையில் கொண்டாடப்பட்டது. கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய நூல்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பொறுப்பாளர்கள் கிராமப் புறங்களில் ஆசிரியர் நூல்கள் வழங்கப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்
உ.சிவதாணு கருத்துரை ஆற்றினார். கலை இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன், இளைஞரணி ம.தமிழ்மதி குமரிச் செல்வன், மாநகர துணைத் தலைவர் கவிஞர் எச். செய்க் முகமது ,கன்னியாகுமரி திராவிடர்கழக கிளைக்கழக அமைப் பாளர் க.யுவான்ஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
கழகத் தலைவர் தமிழர் தலைவரின் பிறந்த நாள் கொள்கைத் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment