பல்திறன் போட்டிகளில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

பல்திறன் போட்டிகளில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

சென்னை, டிச. 21, தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் டாக்டர் எம்ஜி.ஆர்.அவர்களின் நினைவாக, டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் பள்ளி- கல்லூரி மாணவ -மாணவியருக்கான பல்திறன் போட்டிகளை நடத்த உள்ளது.

இதில் முதல் நாளான ஜனவரி 24 அன்று ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கலைதிறன் போட்டி ஆகியவை யும், இரண்டாம் நாளான ஜனவரி 25 அன்று கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகிய போட்டிகள் நடை பெறும்.

இப்போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் விண்ணப் பப் படிவத்தை சென்னை, இராஜா அண்ணாமலை புரத்திலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கல்லூரி யில் (தொ.பே.:2493 7382/92) பெற்றுக் கொள்ளலாம்; அல்லது www.mgrjanaki.ac.in  என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 19 ஜனவரி 2023 ஆகும்.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவோருக்கு முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளும், சில ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் உண்டு. போட்டியில் பங்கேற்பதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது என இக்கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment