'தினமலர்'கள் கண்டுகொள்ளுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

'தினமலர்'கள் கண்டுகொள்ளுமா?

ஒரு பிரத்தியேக சூழ்நிலையில் ஒரு பெண் கான்வாயில் தொற்றிச் சென்றால் கேலி பேசும் தினமலரே! அதே நேரத்தில்  ஆண் தொற்றிச் சென்றால் தினமலர்கள் கண்டுகொள்ளுமா?

பிரதமர் எத்தனை முறை காரில் படிக்கட்டுகளில் நின்று கை காட்டியிருக்கிறார். தொழு நோயாளியான ஒருவனை தலையில் சுமந்து வேசி வீட்டில் விட்டு வந்த பெண் எல்லாம் பத்தினி என்று பாராட்டுப் பாட்டுப் பாடும் கூட்டமாயிற்றே!

பெண் என்றால் தினமலர்களுக்கு மனுதர்ம புத்தி தான் முந்திக் கொண்டு வரும். விபச்சார தோஷம் உள்ளவள் பெண் என்று கூறும் மனு தர்மத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தை, தை என்று ஆடும் கூட்டம் தானே! 30 சதவீத பெண்களுக்குத்தான்  பெண்மை உண்டு என்று கூறும் குருமூர்த்திகளின் வகையறா தானே! ஆனால் ஒன்றை மட்டும் தினமலர் ஒப்புக்கொண்டு விட்டது. ஆண், பெண் சமத்துவம் என்றால் தந்தை பெரியாரின் நினைவு தான் அவர்களுக்கு வருகிறது - வேறு வழி இல்லை!

No comments:

Post a Comment