அரசு கேபிள் தொலைக்காட்சி செயல்பாடுகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

அரசு கேபிள் தொலைக்காட்சி செயல்பாடுகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை, டிச. 14 அரசு கேபிள் தொலைக்காட்சி செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஓ.டி.டி. தளத்தை உருவாக்க நடவ டிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  

உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், குறைந்த கட்டணத்தில் சிறந்த கேபிள் தொலைக்காட்சி சேவையை பொதுமக்களுக்கு வழங் கவும் 2007-ம் ஆண்டு 'அரசு கேபிள் டிவி நிறுவனம்' உருவாக்கப்பட்டு, 2011-ஆம் ஆண்டு 'தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்' என பெயர் மாற்றம் செய் யப்பட்டது. ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் 2017-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு டி.ஏ.எஸ். உரிமம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக் காட்சி நிறுவனம் பொதுமக்களுக்கு இலவச தரநிலை வரையறை எனப்படும் எச்.டி. 'செட்டாப்' பெட்டிகளை வழங்கி 2017ஆ-ம் ஆண்டு டிஜிட்டல் சேவையையும், 2018-ஆம் ஆண்டு எச்.டி. சேவையையும் தொடங்கியது. 

இந்த 'செட்டாப்' பெட்டிகள் உள் ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட் டர்கள் மூலமாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதன் மூலம் 136 கட்டணமில்லா சேனல்கள், 82 கட்டண சேனல்கள் என மொத்தம் 218 சேனல்கள் ரூ.140 மற்றும் சரக்கு சேவை வரி என்ற கட்டணத்தில் டிஜிட் டல் முறையில் இந்தியாவிலேயே மிக குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது. கடந்த 19.11.2022 அன்று ஒளிபரப்பு சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஒளிபரப்பு சேவை நடைபெற்று வருகிறது. மீத முள்ள இடர்பாடுகளை உயர் தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் நிவர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

முன்னோடி வர்த்தக நிறுவனமாக...

இந்தநிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இந்த நிறுவனத்தின் எதிர்கால செயல்திட்டம் குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், வணிக திட்டங்களை விரைந்து செயல் படுத்திட அறிவுறுத்தினார். ஓ.டி.டி. சேவை மேலும் சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்குவது குறித்தும், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை வழங்கக்கூடிய எச்.டி. செட்டாப் பாக்ஸ்களை அடுத்த 6 மாத காலங்களில் வழங்குவது மற்றும் ஓ.டி.டி. தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்ட்டது. எதிர் வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், மேலும் அதிக சந்தாதாரர்களை சேர்த்து, ஒரு முன்னோடி வர்த்தக நிறு வனமாக செயல்படவும் ஆலோசனை வழங்கினார். 

கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச் சர் மனோ தங்கராஜ், தலைமை செய லாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் நா.முருகானந்தம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல், தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜான் லூயிஸ், முதன்மை தொழில்நுட்ப அலுவலர் ராபர்ட் ரவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment