ராஜஸ்தானில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்: காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

ராஜஸ்தானில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்: காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு

ஜெய்ப்பூர், டிச. 5 ராஜஸ்தான் எல்லையில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையி லான ராகுல் காந்தியின் நடைப்பயணம் கடந்த சில நாள்களாக மத்திய பிரதேசத்தில் நடந்து வந்தது. அங்கு இந்த நடைப்பயணம் நிறைவடைந்த நிலையில் நேற்று (4.12.2022) ராஜஸ்தானில் நுழைந்தது. ராஜஸ்தான் எல்லையில் ராகுல் காந்தியை மாநில முதல மைச்சர் அசோக் கெலாட், மூத்த தலைவர் சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா ஆகியோர் வர வேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் திரண்டு ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் நாட்டுப்புறக்கலைஞர்களும் அங்கு நட னங் கள் ஆடி நடைப்பயணத்தில் வந்தவர்களை வரவேற்றனர். 

அப்போது கெலாட், சச்சின் பைலட் மற்றும் கோவிந்த் சிங்குடன் ராகுல் காந்தி கைகோத்து நடனம் ஆடினார். இந்த நிகழ்ச் சியில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவரும் வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக பங்கேற்றது தொண் டர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

No comments:

Post a Comment