மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட விழா சைகை மொழியில் தமிழ்த் தாய் வாழ்த்து அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட விழா சைகை மொழியில் தமிழ்த் தாய் வாழ்த்து அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு

சென்னை, டிச 4 மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட விழாவில் சைகை மொழியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட அதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசு தனிக் கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளிகளுக் குத் தேவையானவற்றைச் செய்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விருகம்பாக்கம் ஜெய் கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி களுக்கான உதவி உபகரணங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், "முதலமைச்சர் அறிவு ரைப்படி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.  தனி கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளிகளுக் குத் தேவையானவற்றைச் செய்து வருகிறோம். முதலமைச்சர் வாழ்த்து  செய்தியில் அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்று கூறியுள்ளார். அதை சிறப் பாகச் செய்ய தான் செயல்பட்டு வருகிறோம்.   தயவு செய்து நம் பிள்ளைகளை மற்ற பிள்ளை களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். மதிப்பெண் மட்டுமே அவர்களின் திறமையை மதிப்பீடு செய்யாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறமை இருக்கும்." இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment