சென்னை, டிச.29 பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினை யும் சேர்த்து வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏற்கெனவே அறிவிக் கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும் பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப் பெற்றது குறித்து, நேற்று (28-.12.-2022) தலை மைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, ஏற்கெனவே அறிவிக் கப்பட்ட
1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், முழுக் கரும்பு ஒன்றினையும் சேர்த்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங் கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
· இதனடிப்படையில், ஏற்கெ னவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ் வினை 2-.1.-2023-க்கு பதிலாக 9.-1.-2023 அன்று தமிழ்நாடு முதல மைச்சர் தொடங்கி வைப்பார்.
· பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவ தற்கான டோக்கன் கொடுக்கும் பணி 3-.1.-2023 முதல் 8-.1.-2023 வரை நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் மருத்துவர் ஜெ. ராதா கிருஷ்ணன், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, மற்றும் உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment