அரசமைப்புச் சட்டம் தெரியாத தமிழ்நாடு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

அரசமைப்புச் சட்டம் தெரியாத தமிழ்நாடு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும்

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடில்லி,டிச.9- தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி மக்கள வையில் இருந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளி நடப்பு செய்தன. 

மக்களவையில் நேற்று (8.12.2022) பூஜ்ஜிய நேரத்தில், தமிழ்நாடு அர சின் ஆன்லைன் சூதாட்ட மசோதா மீது நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு ஆளுநர் குறித்து விவாதிக்க வேண் டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

ஆனால் அதற்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா அனுமதி வழங்கவில்லை என்பதால் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய் தனர். 

இதையடுத்து செய்தியாளர் களைச் சந்தித்த நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்பாலு, ``ஆன் லைன் சூதாட்டம் பல குடும்பங்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் இதுவரை தமிழ்நாட் டில் தற்கொலை செய்துள்ளனர். இதைத் தடுக்கத்தான் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் அதற்கு தமிழ்நாடு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். உட னடியாக தடை செய்யப்பட வேண் டிய இந்த விவகாரம் தொடர்பான மசோதா மீது நடவடிக்கை எடுக்கா மல் காலம் தாழ்த்தி வருகிறார். அதே போல் 22 மசோதாக்கள் தமிழ்நாடு ஆளுநரின் அலமாரியில் முடங்கி கிடக்கின்றன. எனவே, அரசமைப்புச் சட்டம் தெரியாத அவரை திரும்பப் பெற வேண்டும். இவை அனைத்து குறித்தும் ஆளுநருக்கு எடுத்துக் கூறியும், கோரிக்கை வைத்தும் அவர் எந்தப் பதிலும் பேசாமல் இருக்கிறார்.

இது தொடர்பாக மக்களவையில் அமைச்சர்களிடமும் கேள்வி எழுப் பினோம். அரசமைப்புச் சட்டம் தெரிந்த மற்றும் அதனைப் படித்த வரை தமிழ்நாட்டில் ஆளுநராக நிய மனம் செய்ய வேண்டும். அதனால் தற்போது இருக்கும் தமிழ்நாடு ஆளு நரை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், அமெ ரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்துள்ளன. 

ஆனால், மக்களின் நலன் கருதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற் றப்பட்ட தடை சட்டத்துக்கு, ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் உள்ளார். அதே நேரம் ஆன்லைன் கேமிங் நிறுவன நிர்வாகிகளை சந்தித்துள் ளார், அந்த விளையாட்டை 'திறன்' என கூறுகிறார். இதை பார்க்கும் போது, ஆன்லைன் சூதாட்டத்தை தமிழ்நாடு ஆளுநரே ஊக்குவிப் பதாக தான் தெரிகிறது,’’ என்று கூறி னார்.

No comments:

Post a Comment