மக்களின் உரிமைகள்மீது பா.ஜ.க. தாக்குதல்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

மக்களின் உரிமைகள்மீது பா.ஜ.க. தாக்குதல்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

புதுடில்லி, டிச.5 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலை வராக மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பேற்ற பிறகு, காங்கிரஸ் வழிநடத்தல் குழுவின் முதல் கூட்டம் டில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (4.12.2022) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர்  அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க. அரசு நாட்டு மக்கள் மீதும், அவர்களது உரிமைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாகவும், மக்களை பாதுகாப்பது காங்கிரசின் பொறுப்பு என்றும் கூறினார். 

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment