காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை சார்பாக 'பொது வாழ்வில் நேர்மைக்கான விருது'க்கு தமிழர் தலைவர் தேர்வு - அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை சார்பாக 'பொது வாழ்வில் நேர்மைக்கான விருது'க்கு தமிழர் தலைவர் தேர்வு - அறிவிப்பு!

காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளையால்  2015 ஆம் ஆண்டு முதல் அரசியல் மற்றும்  பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாழ்விலும்,  தனி வாழ்விலும்  அப்பழுக்கற்ற நேர்மையை கடைப் பிடித்தும், நாட்டின் சட்ட இறையாண்மை, ஜனநாயகம், நல்லிணக்கம், தேசபக்தி நிறைந்த நலிந்தவர்களின் முன்னேற்றம் போன்றவற்றில் தன்னை அர்ப்பணித்து தேசிய அளவில்  தாக்கத்தை ஏற்படுத்தி, இத்தகைய குண நலன்களுடன் வாழும் மாமனிதர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக  இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ஆம்  ஆண்டுக்கான காயிதே மில்லத் விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. காயிதே மில்லத்  கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச்செயலாளர் எம்.ஜி.தாவுத்  மியா கான், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் 

எம்.எச்.தாஜி ஆதின், உதவி தலைவர் டி.எச்.முகைதீன் ஆகியோர் 12.12.2022 அன்று காலை சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத் தலைவரை சந்தித்து, விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தனர். அறக்கட்டளையினருக்குத் திராவிடர் கழகத் தலைவர் நன்றி தெரிவித்தார். 2023 ஜனவரியில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறும்.


No comments:

Post a Comment