சேலம் இரும்பாலை தனியாருக்கு தாரை வார்ப்பா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

சேலம் இரும்பாலை தனியாருக்கு தாரை வார்ப்பா?

ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்  

சேலம், டிச.30 சேலம் இரும்பாலையை கார்ப்பரேட் தனியாருக்கு தாரை வார்க்க முற்படும் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் நடத்திய கண்டன  ஆர்ப் பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சேலம் இரும்பாலை மூன்றாவது வாயில் அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஅய், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கட்சியினரும், தொமுச, அய்.என்.டி.யு.சி, தொழிலாளர் விடுதலை முன்னணி ஏ.அய்.டி.யு.சி.சி. அய்.டி.யு.ஓ.பி.சி சங்கம் உள்பட ஏராளமான தொழிற் சங்கத்தினரும் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் இன்று (30.12.2022) காலை 11 மணி முதல் ஒரு மணி வரை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன் தலைமையில் நடைபெற்றது.

மாநில கழக அமைப்பாளர் இரா. குணசேகரன், அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு  பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கழக பொதுக்குழு உறுப்பினர் பழனி புள்ளை யண்ணன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் வைரம் வரவேற்புரையாற்றினார். திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கண்டன உரை ஆற்றினார். மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் இரும்பாலை சந்திரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆனந்தராஜ், மகேந்திரன்,  கோபால் ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சண்முகராஜா மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கண்டன உரை ஆற்றினர் மண்டல  தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் விடுதலை சந்திரன், மாவட்ட தலைவர் இளவழகன், ஆத்தூர் மாவட்ட தலைவர் வானவில், மேட்டூர் மாவட்ட செயலாளர் பாலு ஆத்தூர், மாவட்ட செயலாளர் சேகர், மேட்டூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், மாநகர தலைவர் அரங்க இளவரசன், மாவட்ட அமைப்பாளர் பூபதி, மாவட்ட காப்பாளர் ஜவகர், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளர் அரூர் ராஜேந்திரன், நாமக்கல் மாவட்ட தலைவர் குமார், செயலாளர் பெரியசாமி மற்றும் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கக்கூடிய தோழர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். சிறப்பான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட கழகத் தோழர்கள் செய்திருந்தனர்.  பாதிக்கப்பட இருக்கின்ற தொழி லாளர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வழங்கினர்.


No comments:

Post a Comment