அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் `நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் `நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, டிச.20- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட் டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (19.12.2022) தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை யில் நேற்று (19.12.2022) நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது: அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் முன்னோடித் திட்டமாக ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.

தரமானக் கல்வி வழங்குவதில் இந்தி யாவிலேயே தமிழ்நாடு 2ஆவது இடத் தில் இருக்கிறது. முதலிடம் பெறுவதற் கான அனைத்துப் பணிகளையும் பள் ளிக்கல்வித் துறை சிறப்பாக மேற் கொண்டு வருகிறது.

அந்தவகையில், பள்ளிக் குழந்தைகள் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல், மனநிறைவுடன் கற்கக்கூடிய சூழலை திராவிட மாடல் ஆட்சி உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், உள்ளூர் மக்கள், மேனாள் மாணவர்கள், தொழில் துறை யினர் மற்றும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பள்ளி மேம்பாட்டுக்கு இணைந்து செயல்படுவதற்கு ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டம் அடித் தளம் அமைத்திருக்கிறது. இந்த திட்டத் துக்காக நீங்கள் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய் நன்கொடையும்கூட, வெளிப் படைத்தன்மையுடனும், கடமையுணர் வுடனும், பள்ளிகள், ஆசிரியர்கள், குழந் தைகளின் வளர்ச்சிக்காக செலவிடப் படும்.

அதற்கு தொடக்கமாக, நானே முதல் நபராக எனது சொந்த நிதியிலி ருந்து ரூ.5 லட்சத்தை இந்தத் திட்டத் துக்கு அளிக்கிறேன். நமது குழந்தை களின் கல்வி மற்றும் பள்ளிகளின் வளர்ச்சிக்காகத்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

எனவே, அமைச்சர்கள், நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு ஊழி யர்கள், தனியார் துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், பரந்த உள்ளத்துடன் தங்களது பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, "நம்ம ஸ்கூல் ஃபவுண் டேஷன் திட்டத்தின் மூலம் தென்னிந் தியாவில் 2,500 பள்ளிகளைத் தத்தெடுத் துள்ளனர். அவற்றில் 2,000 பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டத் தலைவரும், டிவிஎஸ் நிறுவனத் தலைவருமான வேணு சீனிவாசன் பேசும்போது, "மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும் இந்த திட் டம் வழிவகுக்கும்" என்றார். நல்லெண் ணத் தூதர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வ நாதன் ஆனந்த் பேசும்போது, "தரமா னக் கல்வி, நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர் கள், சிறந்த பள்ளிக் கட்டமைப்புகள், விளையாட்டு மற்றும் கல்விக்கு அப் பாற்பட்ட செயல்பாடுகள், உடல் நலம் காப்பது உள்ளிட்டவை அடங்கியதாக நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டம் அமைந்துள்ளது" என்றார்.

நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் அரசு அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திரைப் படத் துறையினர், தொழிலதிபர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் டிவிட்டர்

வேருக்கு நீராவோம்...: ‘நம்ம பள்ளி ஃபவுண்டேஷன்’ திட்டம் தொடர்பாக முதலமைச்சர் தனது டிவிட்டர் பக்கத் தில், "கல்வி எனும் பேராயுதத்தைக் கொடுத்து, ஏழை, எளிய பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்களை ஏற்றி விடும் ஏணியாக உள்ள நமது அரசுப் பள்ளிகளைக் காக்க ‘நம்ம பள்ளி ஃபவுண்டேஷன்’ திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் பரந்த உள்ளத்துடன் நிதியுதவி தாருங் கள். வேருக்கு நீராவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.----


No comments:

Post a Comment