பள்ளி செல்லா, இடைநின்ற மாணவ-மாணவிகள்பற்றி வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிகள் : கல்வித்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

பள்ளி செல்லா, இடைநின்ற மாணவ-மாணவிகள்பற்றி வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிகள் : கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, டிச.16  1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத் துவதற்காக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற மாணவ-மாணவிகள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணி நடத்தப் படுகிறது. இவ்வாறு கண்டறியப்படும் மாணவ- _ மாணவிகளுக்கு ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் சிறப்பு பயிற்சி மய்யங்கள் மூலம் கல்வி வழங் கப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணி அலைபேசி செயலி வாயிலாக கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்களில் இருந்து அந்த கைப்பேசி செயலியில் கூடுதல் மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டு, 2022-_2023ஆ-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி மூலம் தொடர்ந்து 30 வேலை நாள்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ-மாணவிகள், பள்ளியே செல்லாத மாணவ-மாண விகள், 8ஆ-ம் வகுப்பு முடிக்காமல் இடைநிற்கும் மாணவ-_ மாணவிகள் ஆகியோரை அடையாளம் காணப் படும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் எந்தவொரு குடியி ருப்பும் விடுபடாமல், வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடத்தப்பட வேண்டும் என்றும், இதில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறிய வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. வீடு வாரியான கணக்கெடுப்பில், குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையம், உணவ கங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசைப் பகுதிகள், கடலோர மாவட்டங்களில் உள்ள கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். இந்த பணியில் ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள், கிராமப்புற செவிலி யர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், கல்வி தன்னார் வலர்கள் உள்பட பலர் ஈடுபட இருக் கின்றனர். 

இந்தாண்டக்கான கணக்கெடுக்கும் களப்பணி வருகிற 19-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 11-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியிருக்கிறார். மேலும், "பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத்திறனாளி மாணவ _ -மாணவிகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும். சிறப்பு பயிற்சி தேவைப்படும் மாணவ-மாண விகளை இணைப்பு சிறப்பு பயிற்சி மய்யங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிகளில் சேர்க்கப் பட்டவுடன் அவர்களின் விவரங்களை கல்வியியல் மேலாண்மை தகவல் மய்யத் தில் (எமிஸ்) பதிவு செய்யவேண்டும்" போன்ற உத்தரவுகளும் அதில் பிறப் பிக்கப்பட்டு இருக்கின்றன.


No comments:

Post a Comment