பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமில்லையாம்! ஒன்றிய இணை அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமில்லையாம்! ஒன்றிய இணை அமைச்சர் தகவல்

புதுடில்லி, டிச.14 பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசின் பரி சீலனையில் இல்லை என, மாநிலங்கள வையில் மாநிலங்களுக்கான ஒன்றிய நிதித் துறை இணையமைச்சர் பாகவத் கராட்  தெரிவித்தார்.பழை ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வரு கின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் காட்டிலும் புதிய திட்டத்தில் பணியாளர்களுக்குக் கிடைக்கும் ஓய் வூதியத் தொகை குறைவாகவே உள் ளது. அதன் காரணமாக பழைய ஓய் வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென பல மாநிலங்களைச் சோந்த அரசுப் பணியாளர்கள் குரலெ ழுப்பி வருகின்றனர். இதையடுத்து எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங் களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்து வருகின்றன. பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநிலங்கள வையில் இதுதொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக   ஒன்றிய நிதி இணை யமைச்சர் பாகவத் கராட் அளித்துள்ள பதிலில் ,  ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று தெரிவித்து உள்ளார். மேலும், மாநில அரசுப் பணியாளர் களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்க முடிவு எடுத்திருப்பது குறித்தும், அதுதொடர்பான பரிந்துரை யையும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் ஒன்றிய அரசிடமும், ஓய்வூதிய நிதி ஒழுங்கு படுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணை யத்திடமும் (பிஎப்ஆர்டிஏ) சமர்ப்பித் துள்ளன.

பஞ்சாப் மாநிலத்தின் சார்பில் இது போன்ற பரிந்துரை எதுவும் சமர்ப்பிக் கப்படவில்லை.  மேலும், இந்தப் பரிந் துரையை சமர்ப்பித்த மாநிலங்களுக்கு பதிலளித்த பிஎப்ஆர்டிஏ, ‘பிஎப்ஆர்டிஏ சட்டம் 2013 மற்றும் பிற வழி காட்டுதல்களின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் டெபாசிட் (வைப்பு) செய்யப்பட்ட அரசு மற்றும் பணியாளர் தரப்பு பங்களிப்புகள் மீண்டும் மாநில அரசுகளுக்கு திரும்ப அளிப்பதற்கான வாய்ப்பு இல்லை’ என்று தெரிவித்து விட்டதாக ஒன்றிய அமைச்சர் குறிப்பிட் டுள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளர்களுக்கான முழு ஓய்வூதியத் தொகையையும் அரசே செலுத்தி வந்தது. அத்திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசு அறிமுகப் படுத்தியது. அதன்படி, அடிப்படை ஊதி யத்தில் 10 சதவீதத்தைப் பணியாளர்கள் ஓய்வூதியத்துக்கான பங்களிப்பாகச் செலுத்த வேண்டும். அரசு சார்பில் 14 சதவீதம் செலுத்தப்படும். 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரசுப் பணியில் இணைந்த பணி யாளர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என அறிவிக் கப்பட்டது.

No comments:

Post a Comment