பெங்களூரு, டிச.20- கருநாடக சட்டப்பேரவை குளிர் கால கூட்டத்தொடர் பெலகாவியில் உள்ள சுவர்ணசவு தாவில் நேற்று (19.12.2022) தொடங்கியது. பேரவை உள்ளே பசவண்ணர், விவேகானந்தர், காந்தியார், அம்பேத்கர், சர்தார் வல்லபபாய் படேல், நேதாஜி, வீர சாவர்க்கர் உள்ளிட்டோரின் உருவப் படங்களை பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வர் எக்டே காகேரி திறந்து வைத்தார்.
வீர சாவர்க்கரின் படம் திறக்கப்பட்ட போது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கருநாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மய்யப் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், “வீர சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. சர்ச்சைக் குரிய ஒருவரின் படத்தை திறப்பது ஏன் என கேட்க விரும்புகிறோம். மக்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக் காமல், சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு ஏன் முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது? வீர சாவர்க்கரின் படத்தை திறந்த அரசு, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படத்தை ஏன் திறக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment