மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி நூல்கள் வழங்கப்பட்டன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி நூல்கள் வழங்கப்பட்டன

தருமபுரி மாவட்டத்தில் புட்டிரெட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி - நாட்டு நலப்பணி திட்ட  மாணவர்களுக்கு அறிவுலக பேராசான் தந்தை பெரியார் அவர்களை நினைவுகூரும் வகையில், நீதிக் கட்சியின் கல்வி உரிமை, இடஒதுக்கீடு என்னும் தலைப்பில்  மாணவர்களிடம் திராவிடர் கழக இளைஞரணி மாவட்ட தலைவர் த.மு.யாழ் திலீபன் உரையாற்றினார். மாணவர்களுக்கு தந்தை பெரியார்,  ஆசிரியர் கி.வீரமணி எழுதிய நூல்கள் வழங்கப்பட்டன. நிகழ்வை பகுத்தறிவாளர் ஆசிரியர் மோகன் ஏற்பாடு செய்தார். வேப்பிலைபட்டி திராவிட மாணவர் கிளை கழக அமைப்பாளர் ஹரிஹரன் பங்கேற்றார்.


No comments:

Post a Comment