தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தாம்பரம், டிச. 29- தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 25-.12-.2022 ஞாயி றுக்கிழமை மாலை 5 மணியளவில் தாம்பரம் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண் காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலை வர் எஸ். ஆர்.வெங்கடேஷ் தலை மையில் மாவட்ட செயலாளர் இரா.சு.உத்ரா, மாவட்ட துணைச் செயலாளர் வி.புஷ்பலதா ஆகி யோர் முன்னிலையில் சென்னை மண்டல கழக தலைவர் தி.இரா.இரத்தினசாமி சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.

மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.முத் தையன்,  மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், நகர செயலாளர் சு.மோகன்ராஜ், நகர துணைச் செயலாளர் மா.குணசேகரன், மாடம்பாக்கம் அ.கருப்பையா, ஆவடி மாவட்ட துணைச் செய லாளர் க.தமிழ்ச்செல்வன் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்பித்து சிறப்புரையாற்றினர்.

கூட்ட தீர்மானமாக வாரம் தோறும் மாலை 5 மணி முதல் 6.30மணி வரை சிறப்பு கூட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு அனைவரின் கை தட்டலுடன் தீர்மானம் நிறைவேறியது.

No comments:

Post a Comment