செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

செய்தியும், சிந்தனையும்....!

பார்ப்பனக் கொள்ளைக்கா?

* இந்துக் கோவில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கவேண்டும்.                               

- சு.சாமி

>> ஏன்? பார்ப்பனக் கொள்ளைக்கா?

கிடைத்தது யாருக்கு?

* சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 445 பேர் வேலை வாய்ப்பைப் பெற்றனர்.

>> இதில் எத்தனைப் பேருக்கு பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு இடம் கிடைத்தது?

ஆழ்ந்த பரிசீலனையோ!

* ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - பரிசீல னையில் உள்ளதாம்.

- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

>> ‘ஒரு மகாமகம்' காலம் ஆகுமோ!

எத்தனை உயிர்களைக் குடிக்கத் திட்டம்?

* அணுக்கழிவு மய்யம் அமைக்க மேலும் 

4 ஆண்டுகள் அவகாசம் தேவை - உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்.

>> அதுவரை எத்தனை உயிர்களைக் குடிக்கத் திட்டம்?

இதெல்லாம் வெறும் தூசு!

* நீதிபதிகள் பதவிக்கு உச்சநீதிமன்ற கொலீஜி யத்தின் பரிந்துரையைத் திருப்பி அனுப்பியது ஒன்றிய அரசு. 

>> ஹிட்லரிசத்தின் முனையைத் தொட இன்னும் கொஞ்ச தூரம்தான்.

கீதையைப் படித்துள்ளாரா 

குடியரசுத் தலைவர்?

* பன்னாட்டு கீதைத் திருவிழாவை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். 

>> குடியரசுத் தலைவர் பெண்ணாக இருப்பதால் கீதையின் சுலோகத்தை எடுத்துக் கூற முடியவில்லை!


No comments:

Post a Comment