வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணம் பத்தாயிரம் கோடி டாலர்களாக உயர்வு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணம் பத்தாயிரம் கோடி டாலர்களாக உயர்வு!

சென்னை, டிச.7 வெளிநாடு களில் பணிபுரியும் இந்தியர்கள், நடப்பாண்டில் இந்தியாவிற்கு அனுப்பியுள்ள பணம் பத்தாயிரம் கோடி டாலர்களாக உயர்ந் துள்ளது

சிங்கப்பூர் மற்றும் பிற வெளி நாடுகளில் பணிபுரியும் இந்தி யர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் சொந்தங்களுக்கு பணம் அனுப்புவது வழக்கம். இந் நிலையில், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், நடப் பாண்டில் (2022இல்) மட்டும் இந்தியாவிற்கு அனுப்பியுள்ள பணம் பத்தாயிரம் கோடி(100 பில்லியன்) அமெரிக்க டாலர் களாக உயர்ந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது . உலக வங்கி அறிக்கையின்படி, ஒரு நாடு வெளிநாடுகளில் பணி புரியும் தங்கள் நாட்டு மக்களிட மிருந்து ஓராண்டில் மட்டும் இத்தகைய அதிக எண்ணிக்கையிலான பணப்பரிவர்த்தனையை எட்டுவது இதுவே முதல் முறை யாகும்.2021ஆம் ஆண்டில் இந்தியா 89.4 பில்லியன் டாலர் களை பெற்றுள்ளது. இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுமார் 3% பங்கு இந்த வருவாய் மூலம் உள்ளது. வெளிநாடுகளில் அதிகரித்துள்ள ஊதிய உயர்வு மற்றும் அமெரிக்கா போன்ற பிற வளர்ந்த நாடுகளில் நிலவும் வலுவான தொழிலாளர் சந்தைகள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், சமீபத்திய ஆண்டுகளில், பல இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற அதிக வருமானம் கொண்ட நாடுகளில் அதிக சம்பளம் கிடைக்கும் வேலை களுக்கு மாறியுள்ளனர். உல கெங்கிலும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் தாய்நாட்டிற்கு அனுப் பும் பணத்தின் அளவு நடப் பாண்டில் 5% அதிகரித்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வரு மானம் உள்ள நாடுகளில், குடும்ப வருமானத்திற்கு வெளி நாடுகளில் இருந்து வரும் பணம் ஒரு முக்கிய ஆதாரமாக உள் ளது. இந்தியாவை தொடர்ந்து மெக்ஸிகோ, சீனா, எகிப்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் வெளிநாடுகளில் பணி புரியும் தங்கள் நாட்டு மக்களிட மிருந்து அதிகளவு பணத்தை பெற்றுள்ளன.


No comments:

Post a Comment