25.12.2022 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வு, மறக்க முடியாத வாழ்க்கைத் தருணமாக அமைந்தது. நான் எதிர்பார்க்காத நல்வாய்ப்பு. ஆசிரி யர் அவர்கள் இரண்டு மணி நேரங் களுக்கும் மேலாக இளைஞர்களுடன் உரையாடி சந்தேகங்களுக்கும், கோரிக் கைகளுக்கும் உடனுக்குடன் பதில் அளித் தது அனைவரையும் வியக்க வைத்தது.
பேராசிரியர் ஜெயரஞ்சன் சார், கோவி லெனின் அண்ணன், சுபகுண ராஜன் சார் போன்றோரின் விளக்கமான உரைகள் பெரிய தெளிவை வழங்கின. சுப.குணராஜன் சாரிடம் கேட்பதற்காக நான் வைத்திருந்த கேள்வி ஒன்றை நேர மின்மை காரணமாக கேட்க முடியாமல் போய்விட்டது. (அடுத்த சந்திப்பில் தொடர்வோம் சார்)
அதன்பிறகு பலரும் தங்கள் துறை பற்றி பேசினோம். சமூக வலைதளங்கள் தொடங்கி, தொழில் முனைவோராக எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கல்வி, சுயமுன்னேற்றம், அரசியல் என பரந்து பட்ட தலைப்புகளில் தெளிவாக ஆழமாக பல கருத்துகளை விவாதித்தனர். மொத் தத்தில் ஒரு துறைசார் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டதைப் போல இருந்தது.
இந்த வாய்ப்பை அமைத்துத் தந்த ஆசிரியர் அவர்களுக்கும், பெரியார் திடலுக்கும் மனமார்ந்த நன்றி!
மருத்துவர் சென்பாலன், ஓமான்
No comments:
Post a Comment