இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்கள் விரட்டியடிப்பு : வலைகள் சேதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்கள் விரட்டியடிப்பு : வலைகள் சேதம்

ராமேசுவரம், டிச. 19 கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து வலைகளை அறுத்து சேதப்படுத்தினர்.  ராமேசுவரத்தில் இருந்து 17.12.2022 அன்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது 3 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக விரித்திருந்த வலைகளையும் சேதப்படுத்தி யதாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படை விரட்டியடிப்பால் நேற்று காலை குறைந்த அளவிலான மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். இலங்கை கடற்படை விரட்டியடிப்பு சம்பவம் குறித்து மீனவர்கள் யாரும் மீன்துறை அலுவலகத்தில் எந்த ஒரு புகாரும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment