பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை, டிச.19 தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது 

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 16ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக் பள்ளி களில் நடைபெற்று வரும் இந்த தேர்வுக்கு மாவட்ட அளவில், பொதுவான வினாத் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. அரையாண்டு தேர்வுகள் வருகிற 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதாவது, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கிய அரையாண்டு தேர்வு டிசம்பர் 23ஆம் தேதியுடனும், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கிய அரையாண்டு தேர்வு டிசம்பர் 23ஆம் தேதியுடனும் முடிவடைகிறது.இந்த நிலை யில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட் டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை, 9 நாட்கள் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி முதல் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment