மாண்டஸ் புயல் : அரசின் நடவடிக்கைக்கு முத்தரசன் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

மாண்டஸ் புயல் : அரசின் நடவடிக்கைக்கு முத்தரசன் பாராட்டு

சென்னை, டிச.12 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்  வெளியிட்டுள்ள அறிக்கை: புயல் கரையை கடந்தபோதும் சென்னை வீதிகளில் மழை வெள்ளம் தேங்காமல், போக்கு வரத்து தடையின்றி இயங்கியது. மின்சாரம் பெருமளவு தடையின்றி கிடைத்தது. ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள் கடுமையான புயல் காற்றிலும், தொடர் மழையிலும் சாலைகளில் இறங்கி களப்பணியாற்றியது ராணுவ வீரர்களை நினைவூட்டியது.

மாண்டஸ் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் சமாளித்த தமிழ்நாடு அரசின் நடவ டிக்கையை பாராட்டுகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்கள்,  விவசாயிகளுக்கு போதுமான நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment