இலால்குடி, டிச. 29- இலால்குடி கழக மாவட்ட சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது. முதலாவதாக மகளிர் அணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. சட்ட எரிப்பு வீரர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பட்டிமன்றம் நடைபெற்றது.
சமூகத்தில் அறி வார்ந்த சமுதாயம் அமைந்திட பெரிதும் தடையாக இருப்பது மூடத்தனமா? ஜாதி வெறியா? என்ற பட்டிமன்றத்திற்கு நடுவராக கிராம பிரச்சார குழு செயலாளர் அதிரடி அன்பழகன், மூடத்தனமே! என்ற தலைப்பில் கழக பேச்சாளர் இராம. அன்பழகன். கழக பேச்சாளர் பூவை புலிகேசி ஆகியோரும் ஜாதி வெறியே என்ற தலைப்பில் கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வம், மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி ஆகியோர் வாதிட் டனர்.
பட்டிமன்றத்தில் சமூகத்தில் அறி வார்ந்த சமுதாயம் அமைந்திட பெரிதும் தடையாக இருப்பது மூடத்தனமே என்று நடுவர் தீர்ப்பளித்தார். ஆசிரிய ரின் பிறந்த நாள் விழாவானது பத்து தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டு இறுதியாக பட்டிமன் றத்தோடு நிறைவு விழா நடைபெற்று முடிந்தது.
No comments:
Post a Comment