புத்தாண்டு கொண்டாட்டம் கடற்கரை சாலையில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதியில்லை சென்னை காவல்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

புத்தாண்டு கொண்டாட்டம் கடற்கரை சாலையில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதியில்லை சென்னை காவல்துறை அறிவிப்பு

சென்னை, டிச.30 புத்தாண்டு கொண் டாட்டத்தையொட்டி, சென்னை காவல் துறை புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவித்து உள்ளது. முன்னதாக இரவு 1மணிக்கு மேல் மட்டுமே மக்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில், மேலும்  பல கட்டுப்பாடுகளை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.

புத்தாண்டு அன்று சென்னையில் கடற்கரை சாலைகளில் இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். மேலும் நட்சத்திர விடுதிகளில் ஆம் புலன்ஸ் வசதி வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணை யர் சங்கர் ஜிவால் காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சென்னையில் இரு சக்கர வாகன பந்தயத்தை தடுக்க சோதனைச் சாவடிக்ள அமைக்கப்படும். மொபைல் கண்காணிப்பு வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இரவில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பொது மக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. மரணம் இல்லாத புத் தாண்டாக இந்தப் புத்தாண்டு அமைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளது.கடற்கரை சாலையில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் வாக னங்களை நிறுத்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

எலியட்ஸ் கடற்கரையிலும் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. ரோந்து வாகனங்களில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளப்படும். யாரும் இரு சக்கர வாகன பந்தயத்தில்  ஈடுபடக் கூடாது. நட்சத்திர ஓட்டல்களில்,  மொத்த இருக்கையில் 80 சதவீதத்திற்கு மேல் அனுமதிச் சீட்டுகள் விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது விற்பனை செய்யும் இடங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அனுமதிக்க கூடாது. அடையாள அட்டைகளை சோதனை செய்துதான் அனுமதிக்க வேண்டும். நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும்.நட்சத்திர ஓட்டல் களில் உள்ள  நீச்சல்குளங்களின் அருகே எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். காவல் துறை தரப்பில் தரப்படும் கியூஆர் கோடு-அய் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர் களின் கார்களில் ஒட்ட வேண்டும். போதைப் பொருட்களை பயன்படுத்தும் நட்சத்திர விடுதிகளுக்கு 'சீல்' வைக்கப் படும். உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள்  தொடர்ந்து விடுதிகளை ஆய்வு செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment