தமிழ்நாட்டில் வாக்காளர்களாக பதிவு செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக பதிவு செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, டிச 12 தமிழ்நாட்டில் வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய் தல் உள்ளிட்டவற்றுக்காக 23 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. .

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆண்டுதோறும் வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த நவ. 9ஆ-ம் தேதி தொடங்கியது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. 

அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது, 6,18,26,182 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3,03,95,103 ஆண்கள், 3,14,23,321 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்: 7,758 பேர் அடங்குவர்.

தொடர்ந்து நவ. 9-ஆம் தேதி முதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல்,முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டன. நேரிலும், இணையதளம் வழியாகவும் விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் கடந்த நவ, 12,13 மற்றும் 26, 27 ஆகிய நான்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 

இந்த முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 7,57,341 விண்ணப் பங்கள், பெயர்நீக்கத்துக்கு 6,05,062 விண்ணப்பங்கள் உட்பட 17,02,689 விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன. 

இந்நிலையில், கடந்த டிச. 8ஆ-ம் தேதியுடன் வாக்காளர் பட்டியல் திருத் தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறும் பணி முடிவடைந்தது.

அந்தவகையில், கடந்த நவ. 9முதல் டிச. 8 வரை 23,03,310 விண்ணப்பங்கள், ஆன்லைன் வாயிலாகவும், நேரிலும், சிறப்பு முகாம்கள் வாயிலாகவும் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பங்களில் அதிகபட்சமாக சேலத்தில் 1.53 லட் சமும், திருவள்ளூரில் 1.46 லட்சமும், சென்னையில் 1.16 லட்சமும் பெறப் பட்டுள்ளது. இதில் பெயர் சேர்க்க மட்டும் 10,34,018 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

திருத்தம் செய்ய 4,78,726 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பெயர் சேர்க்க திருவள் ளூரில் 62,658, சேலத்தில் 55,593, சென்னையில் 54,227 மனுக்களும், நீக்கம் செய்ய, சேலத்தில் 70,067, திருச்சியில் 41,816, கன்னியாகுமரி 38,561 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு, கள ஆய்வு மூலம் சரிபார்க் கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ஆ-ம் தேதி வெளியிடப்படும். வாக்காளர்கள் தொடர்ந்து , பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தத்துக்காக ஷ்ஷ்ஷ்.ஸீஸ்sஜீ.வீஸீ,லீttஜீs://ஸ்ஷீtமீக்ஷீஜீஷீக்ஷீtணீறீ.மீநீவீ.ரீஷீஸ்.வீஸீ ஆகிய இணைய தள முகவரி மற்றும் “க்ஷிளிஜிணிஸி பிணிலிறி லிமிழிணி" கைபேசி செயலி மூலமும் விண் ணப்பிக்கலாம். ஆனால், தற்போது பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக் கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு அந்த மனுக்கள் பரிசீலிக்கப்படும்.

56 கோடி வாக்காளர்கள் 

ஆதார் இணைப்பு

பதிவு செய்யப்பட்ட சுமார் 95 கோடி  வாக்காளர்களில் கிட்டத்தட்ட 56 கோடி பேர் தங்களது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளதாக தேர்தல் ஆணை யத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். ஆதார் மற்றும் வாக்காளர் பட்டியல் விவரங்களை தானாக முன்வந்து இணைக்க வழி வகுக்கும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் திருத்தப்பட்டது.


No comments:

Post a Comment