ரூ.20 கோடியில் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

ரூ.20 கோடியில் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

சென்னை, டிச. 21, செங்கல் பட்டு உள்பட 8 இடங்களில் சுமார் பத்தொன்பதே முக் கால் கோடியில் கட்டப்பட் டுள்ள வருவாய்த்துறை கட்ட டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தார்.  வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் செங்கல்பட்டில் ரூ.1 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியி ருப்பு கட்டடம் கட்டப்பட் டுள்ளது. இதேபோன்று கட லூர் மாவட்டம் சிதம்ப ரத்தில் ரூ.54 லட்சத்து 95 ஆயிரம் செலவில் வருவாய் கோட் டாட்சியர் குடியிருப்பு கட்ட டம், மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் ரூ.2 கோ டியே 79 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலும், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ரூ.2 கோடியே 79 லட்சத்து 3 ஆயிரம் செலவி லும், தூத்துக் குடி மாவட்டம் திருச்செந் தூரில் ரூ.3 கோடியே 82 லட்சத்து 94 ஆயிரம் மதிப் பீட்டிலும், சாத் தான்குளத் தில் ரூ.3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் செலவிலும், திருவாரூர் மாவட்டம், மன் னார்குடியில் ரூ.3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலும், திருச்சி யில் ரூ.2 கோடியே 59 லட்சத்து 66 ஆயிரம் செலவிலும் தாசில் தார் அலுவலக கட்டடங்கள் கட்டப்பட் டுள்ளன. மொத் தம் ரூ.19 கோடியே 84 லட் சத்து 99 ஆயிரம் செலவில் கட்டப்பட் டுள்ள இந்த புதிய கட்டடங்களை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந் தபடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத் தார்.  பின்னர், தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வா ணையத்தின் மூலம் துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங் கினார். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கூடு தல் தலைமை செயலாளர், வரு வாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், வருவாய் நிர்வாக இணை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) ஜான் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment