திருப்பத்தூர், டிச. 15- திருப்பத்தூரில் 17.12.2022 அன்று நடைபெறும் முப்பெரும்விழா ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா.சரவணன், மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சி.தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் ஏ.டி.ஜி.சித்தார்த்தன், ஏ.டி.ஜி.இந்திரஜித், மண்டல இளைஞரணி செயலாளர் எழில். சிற்றரசு, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், கந்திலி ஒன்றிய தலைவர் கனகராசு, சோலையார்பேட்டை நகர செயலாளர் பாண்டியன், ஆத்தூர் அ.சுரேசு, உரந்தை பெ.முத்துச்செல்வன், ஆம்பூர் ஒன்றியத் தலைவர் வெற்றி, ஆம்பூர் வெங்கடேசன் உள்ளிட்ட விழாக் குழுவினர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் ஒருங்கிணைப்பில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஊர்களில் முக்கிய பிரமுகர்கள்,தொழிலதிபர்கள், வணிக பெரு மக்களிடம் விழா அழைப்பிதழை வழங்கி விடுதலை சந்தாக்கள், நன்கொடை பெற்று வருகிறார்கள். தமிழர்தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment