ராகுல் நடைப்பயணத்தில் இணைந்த மேனாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஜெய்ப்பூர், டிச 15 ராகுல்காந்தியின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

ராகுல் நடைப்பயணத்தில் இணைந்த மேனாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஜெய்ப்பூர், டிச 15 ராகுல்காந்தியின்

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் மேனாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இணைந்தார்.  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி  இந்திய ஒற்று மைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்துள்ளது. இந்த நடைப்பயணத்தின்போது ராகுல்காந்தி யுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். ராகுல்காந்தியின் இந்தப் பயணத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இதனிடையே, நடைப்பயணத்தின் 98ஆ-வது நாளாக ராகுல்காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு வரு கிறார். அவருடன் இணைந்து ஆயிரக் கணக்கானோர் பயணித்துக்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், ராகுல்காந்தி மேற் கொண்டு வரும் நடைப்பயணத்தில் மேனாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இணைந்துள்ளார். ராஜஸ் தான் மாநிலம் சுவாமி மதொபூர் பகுதியில் ராகுல்காந்தியுடன்  ரகுராம் ராஜன் இணைந்து நடைப்பயணம் மேற்கொண் டார். ரகுராம் ராஜன் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக செயல் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment