பெரியார் 1000 வினா-விடைப் போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

பெரியார் 1000 வினா-விடைப் போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு

நெய்வேலி நகரம், தாகூர் மெட்ரிக் பள்ளியில், பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு நெய்வேலி வி.அருணாசலம் தலைமையேற்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். கடலூர் மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், நகரத்தலைவர் ச.சு.இசக்கிமுத்து, நகரசெயலாளர் கு.இரத்தினசபாபதி, பொறியாளர்கள் வி.வெங்கடேசன், துரை.கண்ணன், இளைஞரணித் தலைவர் ராசா சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இராமேசுவரத்தில் பரிசளிப்பு விழா கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி இராமேசுவரம் தீவு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு பெரியார் ஆயிரம் வினாவிடைப் போட்டி நடைபெற்றது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


No comments:

Post a Comment