நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல்

‘விடுதலை' சந்தா சேர்க்கையை விரைந்து முடிப்பது - தமிழர் தலைவரின் 90 ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு

நாமக்கல், நவ.9 நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 7.11.2022 அன்று காலை 10 மணி அளவில் நாமக்கல் பெரியார் மன்றத்தில் பெரியார் சுயமரியாதை பிரச்சார அறக்கட்டளை தலைவர் பொத்தனூர் க. சண்முகம் தலை மையில், மாநில இளைஞரணி செய லாளர் இளந்திரையன், மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பெரியசாமி ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வருகை தந்து செழுமையான இயக் கச் செயல்பாடுகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

‘விடுதலை' சந்தா சேர்க்கை, ஆசிரியரின் பிறந்தநாள் கொண் டாடுதல் குறித்து சிறப்பு கருத்துகளை வழங்கினார்.

கூட்டத்தில் மருது அறிவாயுதம், இளங்கோவன், பாவேந்தர் விரும்பி, இந்திரஜித், கலைச்செல்வி, சேகர், பொன்னுசாமி, அசேன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை யாற்றினர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1 :

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 90 ஆவது பிறந்த நாளை கோலாகலமாக சுயமரியாதை நாளா கக் கொண்டாடுவது,

தீர்மானம் 2:

தலைமை கழக அறிவிப்பிற் கிணங்க ‘விடுதலை' சந்தா சேர்க்கை யில் முனைப்பு காட்டி அதிக பட்ச மாக சேர்த்து அளிப்பது என்றும், ஆயுள் சந்தாக்களை அதிகம் சேர்ப்பது, 

தீர்மானம் 3:

பெரியார் 1000 மாணவர் வினா - விடைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வை பள்ளிகள்தோறும் சிறப்பாக நடத்துவது - என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


No comments:

Post a Comment