வானில் நாளை நிலவு மறைப்பை வெறும் கண்ணால் பார்க்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

வானில் நாளை நிலவு மறைப்பை வெறும் கண்ணால் பார்க்கலாம்

சென்னை, நவ.7 வானில் நாளை செவ்வாய்க்கிழமை (8.11.2022) ஏற்படும் நிலவு மறைப்பை கிழக்கு வானில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் கூறினார்.  பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும் போது அது சூரியனின் நேரடியான ஒளியைப் பெற இயலாது போய் விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவ தையே நிலவு மறைப்பு(சந்திர கிரகணம்)   என்கிறோம். நிலவு மறைப்பின் போது சூரியனின் எதிர்த்திசையில் நிலவு வருவதால் நிலவுமறைப்பு  முழு நிலவின்  போதுதான் தெரியும். நிலவு முழுமையாக பூமியின் முழுநிழல் பகுதியில் மறைவது முழு நிலவு மறைப்பு. பகுதி நிலவுமறைப்பின் போது நிலவின் ஒரு பகுதியில் முழுநிழல் பகுதி படியும். எனவே முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. எனவே நிலவின் ஒரு பகுதி அதிக இருளா கவும், மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் காணப்படும். இது பகுதி நிலவு மறைப்பு ஆகும்.

 பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் நிலவு மறைப்பை பூமியின் பெரும் பான் மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காணலாம். நாளை செவ்வாய்க்கிழமை நிலவு மறைப்பு  இந்திய நேரப்படி பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நீடிக்கிறது

இதில் முழு நிலவுமறைப்பு 3.46 மணியில் இருந்து மாலை 5.11 மணி வரை நடக்கும். உச்சபட்ச மாக 4.30 மணிக்கு ஏற்படும். மாலை 5.36 மணிக்கு சூரியன் மறையும். அதற்கு பிறகு மாலை 5.38-க்குத்தான் சந்திரன் உதயமா கிறது. எனவே இந்தியாவில் நிலவுமறைப்பைக் காண இய லாது. ஆனால் 5.38 மணியில் இருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடுவானில் பகுதி மறைப்பை  வெறும் கண்களால் பார்க்கலாம். நிலவு மறைப்பைக் காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களைக் காத்துக்கொள்ள தனிப்பட்ட கவனமோ தேவையில்லை. ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு அய்ரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவு மறைப்பு நன்றாகத் தெரியும். மீண்டும் அடுத்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி தமிழ்நாட்டில் இது போன்ற பகுதி நிலவுமறைப்பைக் காணலாம். மேற்கண்ட தகவல் களை சென்னை பிர்லா கோ ளரங்க இயக்குநர் (பொறுப்பு) சவுந்திரராஜ பெருமாள் தெரிவித்து உள்ளார்.


No comments:

Post a Comment