தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சுகாதாரத் துறை விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சுகாதாரத் துறை விளக்கம்

சென்னை, நவ.8 தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை. ஒன்றிய அரசு கொடுத்ததைவிட கூடுத லாக 48 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021ஆ-ம் ஆண்டு ஜன.16ஆ-ம் தேதி தொடங்கியது. 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படு கிறது. சுகாதாரம், முன்களப் பணி யாளர்கள் மற்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்களுக்கு அரசு மருத்துவமனை களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. அதேநேரம், 18 முதல் 59 வயது வரை யுள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தனியாரில் ரூ.386 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாடு 7-ஆவது இடம்: இந்தியா வில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உத்தரப்பிரதேசம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை 39.02 கோடி டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளது. 17.74 கோடி டோஸ்களுடன் மகாராட் டிரா 2-ஆவது இடமும், 15.67 டோஸ் களுடன் பீகார் 3ஆ-வது இடமும், 15.57 டோஸ்களுடன் மேற்குவங்கம் 4-ஆவது இடமும், 13.35 டோஸ்களுடன் ஒன்றியப் பிரதேசம் 5-ஆவது இடமும், 12.74 டோஸ் களுடன் குஜராத் 6ஆ-வது இடமும் பெற்றுள்ளன. 12.71 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி தமிழ்நாட்டில்  7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இது வரை எவ்வளவு கரோனா தடுப்பூசிகள் வீணாகியுள்ளன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டது. அதற்கு தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககம் (டிபிஎச்) அளித்த பதில் வருமாறு:

ஒன்றிய அரசின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 2021ஆ-ம் ஆண்டு ஜன.16 முதல்கரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்.6-ஆம் தேதி வரை மொத்தமாக 11 கோடியே 55 லட்சத்து 63,680 டோஸ் கரோனா தடுப்பூசிகள் ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு  வழங்கப்பட்டன. அரசு கரோனா தடுப்பூசி மய்யங்கள் மூலம் 12 கோடியே 3 லட்சத்து 68,834 டோஸ் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி 48 லட்சத்து 5,154 டோஸ் தடுப்பூசிகள் கூடுதலாக செலுத்தப்பட் டுள்ளன. எனவே, தடுப்பூசி சேதத்தின் அளவு மைனஸ் 4 சதவீதம் ஆகும். இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கரோனா தடுப்பூசிக்கான ஒரு குப்பியை திறந்தால் குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் 10 பேருக்கு தடுப்பு மருந்தை செலுத்த வேண்டும். குப்பியை திறக்கும்போதும், மருந்தை ஊசியில் எடுக்கும்போதும் வீணாவதை கணக்கில் கொண்டு 11 பேருக்கு செலுத்துவதற்கான தடுப்பு மருந்து குப்பியில் இருக்கும்.

சரியான திட்டமிடல்: ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி செலுத்தத் தொடங் கியபோது போதிய விழிப்புணர்வு இல்லாததால் சில மாதங்கள் தடுப்பூசிகள் வீணாகின. அதன்பின், தடுப்பூசி வீணா வது தடுக்கப்பட்டது.

அதேநேரத்தில் குப்பியில் கூடுதலாக உள்ள தடுப்பு மருந்தையும் சரியாக திட் டமிட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட் டது. இதன்மூலம் ஒன்றிய அரசு வழங்கிய டோஸ்களைவிட கூடுதலான டோஸ் தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் செலுத்தப் பட்டுள்ளன” என்றனர்.


No comments:

Post a Comment