பேரணி: விதிமுறைகளைப் பின்பற்ற முடியாதாம் ஆர்.எஸ்.எஸ்.சின் பரிதாப நிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

பேரணி: விதிமுறைகளைப் பின்பற்ற முடியாதாம் ஆர்.எஸ்.எஸ்.சின் பரிதாப நிலை

சென்னை, நவ. 6- உள் அரங்கப் பேரணி, அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு விதிமுறை களை நீதிமன்றம் விதித்ததால் பேரணியை ரத்து செய்வதாக ஆர்.எஸ்.எஸ். தென் மண்டலத் தலைவர் வன்னியராஜன் அறிவித்தார்

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக ஆர்எஸ் எஸ் தென் மண்டல தலைவர் இரா. வன்னியராஜன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வ லத்தை உள் அரங்கிலோ, நான்கு சுவர்களுக்குள்ளே நடத்துமாறு கூறியிருப்பது எங்களுக்கு ஏற் புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொதுவெளியில் நடைபெற் றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை நாங்கள் சட்ட ரீதி யாக எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். அதனால் நவம்பர் 6ஆம் தேதி நடக்கவிருந்த ஊர் வலத்தை இத்தகைய காரணங் களால் நடத்த இயலாது என் பதை தெரிவித்துக் கொள்கி றோம்," என்று கூறப்பட்டுள் ளது.

முன்னதாக, அக்டோபர் 2ஆம் தேதியன்று தமிழ்நாட் டில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணி வகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர் கள் சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் ஆறாம் தேதியன்று ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு செப்டம்பர் 30ஆம் தேதி உத் தரவிட்டது. கடலூர், பெரம்ப லூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் ஊர்வலத் திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிற கும் மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல் துறை அனுமதி வழங்க மறுப்ப தாகக் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக் குரைஞர் பிரபாகரன், "ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு மூன்று இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது மற்ற 47 இடங்களில் காவல் துறை அனுமதி வழங்க மறுக்கி றது. நீதிமன்றம் அனுமதியளித்த பிறகும் அந்த உத்தரவை செயல் படுத்தாமல் உளவுத்துறையின் அறிக்கையை காட்டி தமிழ் நாடு அரசு அனுமதி மறுக்கிறது" என்று வாதிட்டார்.

அப்போது தமிழ்நாடு அர சின் சார்பில் ஆஜரான வழக்கு ரைஞர் என்.ஆர். இளங்கோ, "ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தர விட்டதற்குப் பின்னால், சூழல் மாறியிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டே மூன்று இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


ஆர்.எஸ்.எஸ். பேரணி ரத்தும் அடையாள அட்டை உத்தரவும்

ஆர்,எஸ்,எஸ். பேரணியை அவர்களே ரத்து செய்துவிட்டனர். தமிழ்நாடு அரசு விதித்த நிபந்தனைகளே காரணம். 

1. பேரணியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டை அவசியம்.

2.எந்தப் பகுதியில் நடக்கிறதோ அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். 

3.கலந்து கொள்பவர்களின் ஆதார் நகல் காவல்துறையிடம் முன்பே கொடுக்கப்பட வேண்டும்.

 ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ்  உறுப்பினர் அட்டை அவசியம் என்ற உத்தரவு அவர்களை பின்வாங்க வைத்துள்ளது. காரணம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் மட்டுமே அடையாள அட்டை - அதுவும் நாக்பூர் தலைமையின் கையொப்பம் இருக்காது எந்தப் பகுதியில் இருக்கிறார்களோ அந்தப்பகுதி பிரமுகர் கையொப்பமிட்டுக் கொடுப்பார்.

இதன் மூலம் பிரமுகர்கள் மாட்டிக்கொண்டாலும் நாங்கள் நியமித்தவர் அல்ல என்று தலைமை சொல்லி தப்பித்துவிடும்.   

அவர்கள் துண்டுப்பிரதிகள் மூலம் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை  ”தேசியத்தின் மீதும் பாரதத் தாய்மீதும் பற்றுக்கொண்ட  யார் வேண்டுமாலும் கலந்துகொள்ளலாம்” என்று தான் அழைப்பார்கள்.

தமிழ்நாடு அரசைப் போலவே பாஜக ஆளாத மாநிலங்களும் கட்டுப்பாடுகளை விதித்தால் அவர்களே பேரணியை ரத்து செய்து விடுவார்கள்.


மேலும் 23 இடங்களில் அணிவகுப்பு நடத்தாமல், உள் ளரங்கு கூட்டமாக நடத்திக் கொள்வதாக இருந்தால் அவற் றிற்கு அனுமதி வழங்க காவல் துறை தயாராக உள்ளது. ஆனால், மீதமுள்ள 24 இடங்களில் கூட்டத்திற்கோ, பேரணிக்கோ அனுமதி வழங்க முடியாது. பல இடங்களில் கனமழை பெய்யுமென எச்சரிக் கப்பட்டுள்ளதால், வருவாய்த் துறை, காவல்துறையினர் பாது காப்பு மற்றும் மீட்புப் பணி களில் ஈடுபட வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது" என்று வாதிட்டது.இதற்குப் பிறகு உளவுத் துறையின் அறிக்கையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக் கையை முழுமையாக ஆராய்ந்த பிறகு மீதமுள்ள இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண் டாமா என்பது குறித்து உத்த ரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. "காவல் துறை தாக்கல் செய்த உளவுத் துறை அறிக்கைகள் முழுமை யாக ஆராயப்பட்டன. பத் தாண்டுகளுக்கு முன்பாக நடந்த குற்ற நிகழ்வுகளையும், வழக்குகளையும்தான் காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளை யம், பல்லடம், அருமனை, நாகர் கோவில் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அனு மதி வழங்கலாம்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆகவே, ஏற்கெனவே காவல்துறை அனுமதி வழங்கியிருந்த மூன்று இடங்களுடன் சேர்த்து மொத்தமாக 44 இடங் களில் ஆர்.எஸ்.எஸ். தங்களது அணிவகுப்பை நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந் துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளில் இல்லாமல் விளையாட்டுத் திடல்களை தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டார்.

ஆனால், "இந்த அணிவகுப் பில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனை மீறி நடந்தால் அதற்கு ஆர்.எஸ்.எஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தற்போது அனுமதி வழங் கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் எனவும், இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த புதிதாக மனு அளிக்கலாம் என்று நீதி பதி தனது உத்தரவில் கூறியிருக் கிறார். உள் அரங்குப் பேரணி, அடையாள அட்டை, பங்கு பெறுபவர்களின் விபரங்களை காவல்துறையிடம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை நீதிமன்றம் கூறியதால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணியை ரத்து செய்துள்ளது என்று வன்னிய ராஜா அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment