மேட்டூர் கழக மாவட்ட கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

மேட்டூர் கழக மாவட்ட கலந்துரையாடல்

‘விடுதலை' சந்தா 300-க்கு குறையாமல் சேர்த்து வழங்குதல்;  

தமிழர் தலைவர் ஆசிரியர் 90 ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்திட முடிவு

மேட்டூர், நவ.9 மேட்டூர் கழக மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 7.11.2022 அன்று மாலை 5 மணி அளவில் ஓமலூர் அண்ணார் தங்கும் விடுதியில் பொதுக்குழு உறுப் பினர் பழனி,புள்ளை அண்ணன் தலைமையில், மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர் கவிஞர் சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் பாலு, மேட் டூர் நகர கழக பொருளாளர் கலை யரசன், கலை இலக்கிய பேரவை நிர்வாகி திராவிடன் ராஜ், எடப்பாடி கழக அமைப்பாளர் சண்முகசுந்தரம், சாத்தியம்பட்டி கழகத் தலைவர் முத்து, பகுத்தறிவாளர் கழக நிர்வாகி கள் மதியழகன், வேல்முருகன், தருமபுரி நகரத் தலைவர் கரு.பாலன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இறுதியாக கழகப் பொதுச்செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ‘விடுதலை' சந்தா சேர்க்கையின் அவ சியம் குறித்தும், தமிழர் தலைவரின் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாக நடத்திட வேண்டியதன் முக்கியத் துவம் பற்றியும், கழக அமைப்பு பணி களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கி சிறப் புரை  ஆற்றினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தலைமைக் கழக அறிவிப்பிற் கிணங்க ‘விடுதலை' சந்தா சேர்க் கையை 300-க்குக் குறையாமல் சேர்த்து வழங்குவது என்றும், தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆவது பிறந்தநாளை பிரச்சாரக் கூட்டங்கள் கருத்தரங்கங்கள் என நடத்துவது என்று,ம் ஒன்றிய வாரியாக கழக அமைப்புகளை உருவாக்குவது என் றும், புதிய வரவுகளை இயக்கத்தின் பால் ஈர்ப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வடலூர் இந்திரஜித், நெய்வேலி பாவேந்தர் விரும்பி ஆகி யோர் பங்கு பெற்றனர்.

No comments:

Post a Comment