உரத்தநாடு, நவ.9 மேனாள் சட்டமன்ற உறுப் பினர், மேனாள் அரசு கொறடா, தமிழ்நாடு அரசின் சமூகநீதிக்கான ‘பெரியார் விருது' பெற்ற துரை. கோவிந்தராசன் அவர்கள் (வயது 86) உடல் நலக்குறைவால் 07.11.2022 அன்று காலை 10 மணியளவில் மறைவுற்றார்.
8.11. 2022 காலை 8 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம், வடக்கூரில் வைக்கப்பட்டிருந்த துரை. கோவிந்தராஜன் உடலுக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அ. உத்திராபதி, பெரியார் பெருந்தொண்டர் சேதுராயன் குடிக்காடு மா.ராசப்பன், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், உரத்தநாடு நகர தலைவர் பேபி ரே.ரவிச் சந்திரன், மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.ராஜவேல், ஒன்றிய துணைச் செயலாளர் இரா.சுப்பிரமணியன், ஒரத்தநாடு நகர இளைஞரணி செயலாளர் பொறியாளர் ச.பிரபாகரன், ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
மறைந்த துரை.கோவிந்தராஜன் அவரது சகோதரர் துரை.திருஞானம், மூத்தமகன் டாக்டர் துரை.கோ.கருணாநிதி, இளைய மகன் துரை.கோ.பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினர்.
ஆசிரியர் அறிக்கை
துரை.கோவிந்தராஜன் அவர்களது மறைவை ஒட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதி ‘விடுதலை' நாளி தழில் வெளிவந்திருந்த இரங்கல் அறிக்கை நகல்கள் உற்றார், உறவினர்களிடம் வழங்கப் பட்டது.
No comments:
Post a Comment