ஒன்றிய அரசு கல்வி நிறுவனத்தில் கற்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தமிழ்நாடு அரசு வழங்குகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

ஒன்றிய அரசு கல்வி நிறுவனத்தில் கற்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தமிழ்நாடு அரசு வழங்குகிறது

சென்னை,நவ.30- தமிழ்நாடு முழுவதுமிருந்து பிற் படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவிகள் நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களான அய்.அய்.எம்., என்.அய்.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டரை லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண் டும். 2022-2023ஆம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப் பிக்க விரும்பும் தகுதியான மாணவ-மாணவிகள் சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்தையோ அணுகலாம். இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண் ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப் பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரிக்கு வருகிற ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment