முதுநிலைப் படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு ரத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

முதுநிலைப் படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு ரத்து!

புதுடில்லி, நவ 11 முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டுடன் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக ‘நெக்ஸ்ட்’ தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

இளநிலை மருத்துவ படிப் புகளைப்போல முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் ஆண்டுதோறும் 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மதிப் பெண் அடிப்படையில் மாண வர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு பதிலாக 'நெக்ஸ்ட்' (தேசிய வெளியேறுதல் தேர்வு) என்ற பெயரில் பொது வான தேர்வு நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். அதன்படி, எம்.பி.பி.எஸ். மாணவர்கள் மருத்துவப் பணிகள் செய்வ தற்கான உரிமம் பெறுதல், தகுதி அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு செல் லுதல், வெளிநாடுகளில் மருத் துவம் படித்தவர்கள் இந்தி யாவில் பணிகள் மேற்கொள்வ தற்கான தகுதி பெறுதல் ஆகியவற்றுக்கு பொதுவாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணைய சட்டப்படி எம்.பி.பி.எஸ். இறுதி யாண்டு மாணவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த சட்டம் கடந்த 2020-ஆம் ஆண்டு அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த தேர்வை நடத்துவதற்கு 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை கால அவகாசம் பெறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தேசிய மருத் துவ ஆணையத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், 'நெக்ஸ்ட்' தேர்வை அடுத்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டு, இது குறித்த விருப்பத்தை ஒன்றிய சுகாதார அமைச்சகத் திடம் தெரிவிக்கப்பட்டு உள் ளது. அவ்வாறு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 'நெக்ஸ்ட்' தேர்வு நடத்தப்பட்டால், தற் போதைய நீட் தேர்வு அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரு கிறது. அடுத்த ஆண்டு நடை பெறும் நெக்ஸ்ட் தேர்வை 2019-_2020-ஆம் ஆண்டு பிரிவு மருத்துவ மாணவர்கள் எழுத வேண்டும். இதில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் 2024_20-25ஆ-ம் கல்வி ஆண்டுக் கான முதுநிலை மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த 'நெக்ஸ்ட்' தேர்வை தேசிய மருத்துவ கல்வி வாரியத்துக்கு பதிலாக, எய்ம்ஸ் நிர்வாகம் நடத்தும் என ஒன்றியஅரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. எனினும் இது தொடர்பான இறுதி முடிவு இனி மேல் தான் எடுக்கப்படும் எனவும் அவை மேலும் கூறியுள்ளன.


No comments:

Post a Comment