மழையால் பயிர்கள் பாதிப்பு : கணக்கெடுப்பைத் தொடங்க அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

மழையால் பயிர்கள் பாதிப்பு : கணக்கெடுப்பைத் தொடங்க அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆணை

சென்னை, நவ 15 கனமழையால் கட்டடம் இடிந்து விழுந்தால் தலா ரூ.95 ஆயிரமும், வீட்டுக்குள் மழைநீர் புகுந்தால் 4 ஆயிரத்து 800 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

அவர் மேலும் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை வரும் என்று சொன்ன உடனேயே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து பேசி முதலில் இருந்தே தயார்நிலையில் இருந்த காரணத்தினால்தான் மழையால் ஏற்படும் பாதிப்பு குறைந்திருக்கிறது. உதாரணமாக சென்னையில் எங்குமே தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு முதல்-அமைச்சரின் நேரடி பார்வை தான் காரணம். கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளுக்கு முதல்-அமைச்சரே நேரடியாக சென்றார். அதற்கு முன்பாக கடலூரில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன் ஆகி யோரை அங்கே இருந்து பார்வையிட சொல்லியிருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், செந்தில்பாலாஜி ஆகியோர் நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறார். மழைக்கால பணிகளை முதலமைச்சர் நேரடியாக ஆய்வு செய்யும் காரணத்தால் மிகப் பெரிய பாதிப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

 பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்க வேண்டும்? என்று அரசாங்கத்தில் ஒரு வரையறை இருந்தால் கூட, முதல மைச்சர் வந்த பிறகுதான் அதற்கான முடிவு தெரியும். அரசு கணக்கீட்டின்படி பார்த்தால், வீட்டுக்குள் மழைநீர் உள்ளே வந்திருந்தால் ரூ.4 ஆயிரத்து 800, குடிசை முழுவதுமாக இடிந் திருந்தால் ரூ.5 ஆயிரம், பகுதியாக இடிந்திருந்தால் ரூ.4 ஆயிரத்து 100, கான்கிரீட் கட்டடம் இடிந்திருந்தால் ரூ.95 ஆயிரம் என்பதுதான் இப்போது இருக்கும் அரசின் விதிகள். மழை பாதிப்புகளை முதலமைச்சர் பார்வை யிட்டு வந்த பின்னர், இந்த தொகைகளை உடனடியாக வழங்குவதற்கான பணி களை செய்வோம். குறிப்பாக விவசாய நிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழைநீர் வடிந்த உடனேயே நம்முடைய முதல்-அமைச்சரிடம் கலந்துபேசி, அதி காரிகளை துரிதப்படுத்தி நெல் விளைச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதற்கான பணிகளை செய்ய காத்திருக்கிறோம்.

கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், தேனி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 99 மய்யங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 52 ஆயிரத்து 751 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உணவு, படுக்கை வசதியை உடனடியாக வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் அந்த பணிகளை செய்து வருகிறது. அடுத்து ஓரிரு நாளில் வரும் என்று கூறப்பட்டிருக்கும் மழையை எதிர்கொள்வதற்கும், மாவட்ட நிர்வாகங்களுக்கும் நாங்கள் எச்சரிக்கை கொடுத்திருக்கிறோம். இப்போது எப்படி மழையை எதிர்கொண்டோமோ, அதை விட திறமையாக வருங்காலங் களில் மழையை நாங்கள் எதிர் கொள்வோம். இவ்வாறு அவர் கூறி னார்.  இதற்கிடையே அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மயிலாடு துறை, கடலூர் உள்பட 24 மாவட் டங்களில் பயிர் சேதங்களை கணக்கிடும் பணியை தொடங்க மாவட்ட ஆட்சி யர்களுக்கு அறிவுரை வழங்கப்பட் டுள்ளது' என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment