தமிழுக்கு ஆட்சி மொழித் தகுதி தேவை அமித்ஷாவுக்கு அமைச்சர் க.பொன்முடி பதிலடி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

தமிழுக்கு ஆட்சி மொழித் தகுதி தேவை அமித்ஷாவுக்கு அமைச்சர் க.பொன்முடி பதிலடி!

சென்னை, நவ 14 12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வியை திமுக அரசு தமிழில் அறிமுகம் செய்துவிட்டது என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு, அமைச்சர் க.பொன்முடி பதில் அளித்துள் ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 

பொறியியல் பட்டப்படிப்பை முதன்முதலில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில், முத்தமிழறிஞர் கலை ஞர் அவர்கள் 2010-ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தி விட்டார். இந்தி யாவிலேயே முதல் மாநிலமாக பொறியியல் படிப்பினைத் தாய் மொழியில் கற்க ஏற்பாடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டட (சிவில்) மற்றும் இயந்திரப் (மெக்கானிக்கல்) பொறியியல் படிப்புகளைத் தமிழில் அறிமுகம் செய்து, தி.மு.க. ஆட்சியில் தொடங் கப்பட்ட தமிழில் பொறியியல் கல்வி இன்றும் நடைமுறையில் உள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழில் பொறியியல் படிப்பு நடைமுறையில் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் பொறியியல் கல்வி படித்து பி.இ., பட் டம் பெற்ற தமிழ்நாட்டு இளைஞர்கள் இன்றைக்குப் பொதுப்பணித்துறை, வீட்டுவசதி வாரியம், மெட்ரோ ரயில் திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பல துறைகளில் பொறியாளர்களாகவும், பல பன்னாட்டு நிறுவனங்களின் உயர்பதவிகளை அலங்கரிப்பவர் களாகவும் பணியாற்றி வருகி றார்கள். ஏன், அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழ்வழியில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்ற செல்வி. அய்ஸ்வர்யா தான் 2020-ஆம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் (அய்.ஏ.எஸ்.) வெற்றி பெற்றுள்ளார்.

இதன் அடுத்தகட்டமாக, இப் போது 2022_20-23-ஆம் ஆண்டு முதல் பட்டயப் படிப்புகளிலும் மேற்கண்ட பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காகப் பொறியியல் பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள் தமிழ் வழியில் வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல் பட்டப் படிப்பு சிவில், மெக்கானிக்கல் என்பதையும் தாண்டி, கணினி அறிவியல் பிரிவி லும் தமிழில் தொடங்கப்பட் டுள்ளது. தமிழர் மரபும், தமிழரும் தொழில்நுட்பமும் நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏற்க னவே அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்வழியில் பொறியியல் கல்வி தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு விட்டாலும், மருத்துவப் படிப்பு, அதாவது எம்.பி.பி.எஸ். தமிழில் கற்பதற்கும் வழி செய்யவும் இப்போது தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மூன்று பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எம்.பி.பி.எஸ் முதலாண்டு பாடப் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன். 

எங்கள் அன்னைத் தமிழ்மீது காட்டியுள்ள அக்கறையோடு, சமஸ் கிருதத்திற்கு இணையாக உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக் கும் ஒன்றிய அரசின் நிதியுதவி அளித்திடவும்; ஒன்றிய உள்துறை அமைச்சரே ஒப்புக் கொண்டிருப்பது போல், தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை ஒன்றிய அரசு அலுவல கங்களில் அளித்திடவும் தேவையான முயற்சிகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத் திட்டத்தை அமல் படுத்தவும், டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டு களாக காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பித் தர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment