ட்விட்டர் - இந்தியாவில் 90விழுக்காட்டினர் பணிநீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

ட்விட்டர் - இந்தியாவில் 90விழுக்காட்டினர் பணிநீக்கம்

புதுடில்லி,நவ.8 ட்விட்டர் நிறு வனத்தை எலான் மஸ்க் ரூ.3.75 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தியுள்ளார். அவர் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக கணிசமான பணியாளர்களை அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து வருகிறார்.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத் தின் இந்திய பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது:

இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணி யில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர் களில் 70விழுக்காடு வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள்.

இவை தவிர, சந்தைப் படுத்துதல், பொதுக் கொள்கை, பெருநிறுவன தொடர்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளை சேர்ந்த பணியாளர்களும் ட்விட்டர் நடவடிக்கை யால் வேலை இழப்புக்கு ஆளாகி உள் ளனர். பன்னாட்டு அளவில் அந்நிறுவனத் தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


No comments:

Post a Comment