கொளத்தூர் தொகுதியில் ரூ.39 கோடியில் திட்டங்கள் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

கொளத்தூர் தொகுதியில் ரூ.39 கோடியில் திட்டங்கள் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 சென்னை,நவ.24- சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட் பட்ட பகுதிகளில் ரூ.38.98 கோடியிலான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி னார். கொளத்தூர் தொகுதி தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ.1.27 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.11.2022) திறந்துவைத்து, மாணவ, மாணவிகளுக்கு விளை யாட்டு உபகரணங்களை வழங் கினார். வீனஸ் நகரில் ரூ.7.75 கோடியில் கட்டப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த அரசு பிற்படுத் தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

வீனஸ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில் விடுபட்ட தெருக் களுக்கு ரூ.19.56 கோடியில் கழிவுநீர் அகற்றும் திட்டம் மற்றும் உந்து நிலையம் அமைக்கும் பணி, ஜம்பு லிங்கம் பிரதான வீதியில் இருந்து குமாரப்பா சாலை வரைரூ.37 லட் சத்தில் குடிநீர்க் குழாய் அமைக்கும் பணி, ஜிகேஎம் காலனி 24ஆவது தெருவில் இருந்து பெரியார் நகர் நீரூற்று நிலையம் வரை ரூ.97 லட்சத்தில் கழிவுநீர்க் குழாய் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.

அதேபோல, பந்தர் கார்டன் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ரூ.4.37 கோடி யில் மேம்பாட்டுப் பணி, பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.4.99 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டும் பணி, பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.8.72 கோடியில் மேம்பாட்டுப் பணி, பல்லவன் சாலையில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, தீட்டித் தோட்டம் 4ஆவது தெருவில் உள்ள இரவுக் காப்பகம், பேப்பர் மில்ஸ்சாலையில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையம், குரு சாமி தெருவில் உள்ள ஜார்ஜ் காலனி பூங்கா, பல்லவன் சாலை யில் உள்ள கே.கே.ஆர். அவென்யூ பூங்கா ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள் உட்பட 37 பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட் டினார். புதிய திட்டப் பணிகள் மொத்தம் ரூ.38.98 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளன.

முன்னதாக, பந்தர் கார்டன் மற்றும் பள்ளி சாலையில் நடை பெற்ற நிகழ்ச்சிகளில் ஆசிரியர் களுக்கு பரிசுப் பொருட்களையும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபக ரணங்களையும் முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில், அமைச் சர்கள் கே.என்.நேரு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகர் பாபு, மேயர் ஆர்.பிரியா, நாடாளு மன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன்சட்டப் பேரவை உறுப்பினர் தாயகம் கவி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை முதன்மைச் செயலர் மங்கத் ராம் சர்மா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment