தமிழ்நாடு மீனவர்கள் 15 பேர் இலங்கைக் கடற்படையால் கைது! விடுதலை செய்ய நடவடிக்கை தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

தமிழ்நாடு மீனவர்கள் 15 பேர் இலங்கைக் கடற்படையால் கைது! விடுதலை செய்ய நடவடிக்கை தேவை

ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை, நவ.8 இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்ட 15 தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீன வர்கள் இலங்கை கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டது குறித்தும், அவர்களது 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித் தும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக் நீரிணை பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன. 

இது பாரம்பரிய மீன்பிடி பகுதியை வாழ்வா தாரமாக நம்பியிருக்கும் ஒட்டு மொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத் தையும், கோபத்தையும் ஏற் படுத்துகிறது. 

கைது செய்யப்பட்டுள்ள மீன வர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் மூலமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசின் கட்டுப் பாட்டில் உள்ள 100 மீன்பிடி படகுகளை விடுவிக்க நீங்கள் உதவிட வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


No comments:

Post a Comment