தமிழ்நாட்டில் புதிதாக 104 பேருக்கு கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 104 பேருக்கு கரோனா தொற்று

சென்னை, நவ 9 தமிழ்நாட்டில்  புதிதாக 104 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்£ட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் தழ்நாட்டில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டில்  புதிதாக 104 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 26 பேர் உள்பட 26 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு 10-க்கும் மேல் பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 227 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவில் ... 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 625 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 14,021 ஆக பதிவாகியுள்ளது. 


No comments:

Post a Comment