கன்னியாகுமரியில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டி: மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பரிசளிப்பு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

கன்னியாகுமரியில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டி: மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பரிசளிப்பு விழா!

கன்னியாகுமரி, நவ.11 கன்னியாகுமரியில்  உள்ள ஜோசப் கலாசன்ஸ் பள்ளி , புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, மேரி இமாகுலேட் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில்  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்- பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்  சார்பாக பெரியார் 1000 வினா- விடைப்  போட்டி  சிறப்பாக நடந்தது. ஏராளமான மாணவர்கள் பங்கேற்று  ஆர்வமுடன் தேர்வு எழுதியிருந்தனர். இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கும் விழா அந்த பள்ளிகளில்  நடைபெற்றது.  மாவட்ட கழகத் தலைவர் மா.மு சுப்பிரமணியம், தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கழக ஒன்றிய செயலாளர் குமாரதாஸ், மகளிர் பாசறை தலைவர்  மஞ்சு குமாரதாஸ் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். 

மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் விழாவினை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழா ஏற்பாடுகளை திராவிடர்கழக கன்னியாகுமரி கிளை அமைப்பாளர் க.யுவான்ஸ் செய்திருந்தார். தோழர் குமரிச்செல்வன் கன்னியாகுமரி பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சர்ஜினாள் ப்ரைட்டன், ஆட்லின் சேகர்   மற்றும் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் முதல் பரிசு வென்ற மாணவி மரியசரோவுக்கு   ரூ.5000 (ஜோசப்  கலாசன்ஸ் பள்ளி) வழங்கப்பட்டது.  வெற்றிபெற்ற மாணவ  மாணவியர்களுக்கு பரிசுகளாக மாவட்ட கழகம் சார்பாக பரிசுத்தொகை, பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்  சார்பாக மாணவர்களுக்கு  சான்றிதழ்கள், பதக்கங்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளிகளுக்கு பெரியார் படங்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  தமிழ் ஆசிரியர்கள் 

பங்கேற்றனர்.


No comments:

Post a Comment